Wednesday, September 30, 2015

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?
ஏற்கனவே அரச செலவில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு அரச செலவில் மணி மண்டபம் கட்டப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்துள்ளார்.
சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக இருக்கலாம். அதற்காக எதற்கு மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
மணி மண்டபம் கட்டுவதாயின் சிவாஜி குடும்பத்து பணத்தில் கட்டலாமே. அவர்களிடம் இல்லாத பணமா?
மணி மண்டபம் கட்டுவதாயின் சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் பணம் பெற்று கட்டலாமே. அவர்கள்தானே கோடியில் புரளுகிறார்கள.;
ஒரு சினிமா நடிகருக்கு எதற்காக மக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
100 கோடி ருபாயில் தமிழ்தாய்க்கு சிலை வைக்கப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்தார். அது ஏன் இன்னும் கட்டப்படவில்லை?
மக்கள் பணத்தில் தமிழ் தாய்க்கு சிலை வேண்டுமா என கேட்டவர்கள் இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்?
தமிழத் தாயைவிட சிவாஜி கணேசன் முக்கியமானவரா?
ஒரு சந்தேகம்- சிறந்த நடிகர் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவோர் சிறந்த மருத்துவர், சிறந்த பொறியிலாளர், சிறந்த ஆசிரியர் , சிறந்த தொழிலாளி போன்றவர்களுக்கு ஏன் மணிமண்டபம் கட்டுவதில்லை? சினிமா இவை எல்லாவற்றையும்விட சமூகத்திற்கு முக்கியமானதா?

No comments:

Post a Comment