Wednesday, September 30, 2015

• நூல் வெளியீட்டு விபரம்

• நூல் வெளியீட்டு விபரம்
"சிறப்புமுகாம் என்னும் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம்"
அமெரிக்காவின் குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.
அமெரிக்காவின் குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக் குறைந்தது அதை ஒத்துக்கொள்ளவாவது செய்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டியும் கொடுக்கிறார்.
ஆனால் தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக் கொள்ளவுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!’ என்று தமிழக மக்கள்; பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த ஈழத் தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள்.
(நூலில் இருந்து சில வரிகள்)
இந்நூல் எந்தளவுக்கு ஒரு ஆவணமாக எதிர்காலத்தில் பயன்படும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு சிறிதளவேனும் இந்நூல் உதவுமேயாயின் அதுவே எனக்குப் போதும். ஏனெனில்; எனது நோக்கமும் அதுவே.
இந் நூல் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் எனது தோழமை கலந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment