Wednesday, September 30, 2015

• ஈழத்து குட்டிச் சுட்டீஸ்

• ஈழத்து குட்டிச் சுட்டீஸ்
ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவோம் என்று கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை குறித்து குழந்தைப்பிள்ளைத்தனமாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொருவிதமான கருத்துகளை கூறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
தமிழ்மக்களின் தலைமை தாங்களே என கூறிக்கொள்ளும் இவர்களால்; தமிழ் மக்களின் முக்கியமான இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடானது.
தமிழக சட்டசபையில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஜெயா அம்மையார் தீர்;மானம் நிறைவேற்றுகிறார்.
கலைஞர் கருணாநிதி சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சர்வதேச விசாரணை கோரி அமெரிக்க தூதரலாயத்தின் முன்னால் போராட்டம் நடத்துகின்றனர்.
வடமாகாண சபை முதலமைச்சர் விக்கி தலைமையில் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்மக்கள் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பாத யாத்திரை செல்கின்றனர்.
லண்டனில் புலம் பெயர்ந்த மக்கள் கொட்டும் மழையிலும் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் சர்வதேச விசாரணை கோரி லண்டனில் இருந்து ஜ.நா நோக்கி சயிக்கிளில் பிரச்சாரம் செய்து செல்கின்றனர்.
இவ்வாறு எல்லோரும் சர்வதேச விசாரணை கோரும்போது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மட்டும் அதற்கு எதிராக கருத்து வெளியிடுவது மிகப் பெரிய துரோகமாகும்.
"துரோகமே" உன் மறுபெயர் தமிழ்தேசியகூட்டமைப்பா?

No comments:

Post a Comment