Wednesday, September 30, 2015

• பொழிலன் அவர்களே!

• பொழிலன் அவர்களே!
வைகோ அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க தூரகத்தை முற்றுகையிட்டுள்ளீர்கள்.
ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்காக குண்டு வீசிய வழக்கில் 10 வருடம் சிறைவாசம் அனுபவித்துள்ளீர்கள்.
நீண்ட சிறைவாசத்தின் பின்னரும் எவ்வித விரக்தியும் இன்றி தொடர்ந்தும் ஈழத் தமிழர்களுக்காக போராடுகிறீர்கள்.
ஈழத் தமிழர் மீதான உங்கள் உணர்வை பாராட்டுகிறேன.மிக்க நன்றி.
ஆனால் எமது தலைவர்களான தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்க தீர்மானத்தை முழமையாக ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஈழத் தமிழர்களின் தலைவர்கள் எனப்படுவோர் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்போது தமிழகத்தில் இருந்து தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்பதை அமெரிக்கா எப்படி ஏற்றுக்கொள்ளும்?
எனவே ஈழத் தமிழர்களுக்காக உண்மையில் ஏதாவது செய்யவேண்டும் என நீங்கள் விரும்பினால் சென்னையில் சொகுசாக இருந்துகொண்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன் ,மாவைசேனாதிராசா போன்றவர்களின் வீடுகளை முற்றகையிடுங்கள்.
ஈழ தமிழ்மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இதுவே ஈழத்தமிழருக்கு நீங்கள் செய்யும் போராட்ட உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment