Saturday, August 29, 2020

அவர்கள் வந்தார்கள்

அவர்கள் வந்தார்கள் “நானும் இந்து நீயும் இந்து” என்றார்கள் “உன் கடவுள் முருகன்கூட எம் கடவுள்தான்” என்றார்கள் அப்படியென்றால் வட மாநிலங்களில் ஏன் முருகனுக்கு கோவில் இல்லை என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சரி. பரவாயில்லை. ரஸ்சியாக்காரன் கோரோனோவுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டேன் என்கிறான். நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். சரி எப்படியோ தொலைந்து போகட்டும் என்று பேசாமல் இருந்தால் மெதுவாக எமது வேலைகளை எல்லாம் பறிக்கிறார்கள். இப்போது எமது கேள்வி என்னவென்றால், தமிழன் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் போவதற்கே இ.பாஸ் வேண்டும். அப்படியிருக்க இந்த இந்திக்காரன் எல்லாம் எப்படியடா திருச்சி வந்து சேர்ந்தாங்க? இவங்களுக்கு இ.பாஸ் கொடுத்தவன் யாரடா? Image may contain: Dhalapathi Raj, text that says "திருச்சி ரயில்வே பணிமனையில் 500 பேரில் 450 பேர் வடமாநிலத்தவர்.. திருநாவுக்கரசர் எம்பி கடும் கண்டனம்"

No comments:

Post a Comment