Sunday, May 15, 2016

•இத்தனை அழிவிற்கு பின்பும், இத்தனை அழிவிற்கு காரணமான இந்தியாவை தமிழர்களுக்கு உதவும் என்று நம்புவர்களை என்ன வென்று அழைப்பது?

•இத்தனை அழிவிற்கு பின்பும், இத்தனை அழிவிற்கு காரணமான இந்தியாவை
தமிழர்களுக்கு உதவும் என்று நம்புவர்களை என்ன வென்று அழைப்பது?
செய்தி- இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
இலங்கையில்,
•சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவில்லை
•காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
•இடம் பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை
•வடக்கில் இரந்து ராணுவம் வெளியேற்றப்படவில்லை
•உள்ளக விசாரணை எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை
மாறாக,
மீண்டும் வெள்ளை வான் கைதுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
இராணுவத்திற்கு புதிதாக காணி சுவீகரிக்கப்படுகிறது
புத்த விகாரைகள் தமிழ் பகுதிகளில் கட்டப்படுகின்றன
இதுதானா இலங்கை அரசின் நல்லிணக்க நடவடிக்கை?
இதைத்தானா இந்திய பிரதமர் மோடி பாராட்;டுகிறார்?
அதுமட்டுமா! அவர் மேலும் கூறுகிறார்,
இலங்கையுடனான உறவு சிறப்பாக இருக்கிறது என்கிறார்
இனிவரும் காலங்களில் இன்னும் வலுப்படும் என்கிறார்
இந்து தமிழீழம் அமைக்க இந்தியா உதவும் என்று கூறிய காசி அனந்தன் அய்யா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவும் என்று கூறிய மாகாண முதல்வர் விக்கி அய்யா தயவு செய்து மேடைக்கு வரவும். உங்கள் கருத்து என்ன?
இனப் பிரச்சனைக்கு தீர்வு இந்தியா பெற்று தர இருப்பதால் சம்பூர் அனல் மின் நிலையத்தை வெளியேறும்படி கேட்க முடியாது என்று கூறிய மாவை சேனாதிராசா மேடைக்கு வாரீங்களா?
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசை
இன்னமும் நம்பவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment