Tuesday, May 31, 2016

ஜெயா அம்மையார் மாறிவிட்டாரா? அல்லது திருந்தி விட்டாரா?

•ஜெயா அம்மையார் மாறிவிட்டாரா?
அல்லது திருந்தி விட்டாரா?
ஜெயா அம்மையார் ஸ்டாலினுக்கு வணக்கம் கூறியதையும்
ஸ்டாலினுக்கு முன் சீட் ஒதுக்காமைக்கு வருத்தம் தெரிவித்தமையையும்
சுட்டிக்காட்டி அவர் மாறி விட்டார் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஜெயா அம்மையார் மாறவில்லை என்றும் அவர் நடிக்கிறார் என்றும் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.
500 டாஸ்மாக் கடைகளை மூடியதற்காகவும்
100 யுனிட் மின்சாரம் இலவசமாக தந்தந்தமைக்காகவும்
இன்னும் சிலர் அவர் திருந்திவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் ஒருபுறம் 100 யுனிட் மின்சாரம் தந்துவிட்டு
மறுபுறத்தில் பால் உட்பட்ட பொருட்களின் விலையை ஏற்றிவிட்டார்.
500 கடைகளை மூடினாலும் டாஸ்மாக் மொத்த விற்பனை குறையவில்லை.
ஜெயா அம்மையாரின் முதல் கையெழுத்து,
பேரறிவாளன் உட்பட்ட எழுவரின் விடுதலையாக இருந்திருந்தால்
அதிக காலம் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்கு உத்தரவிட்டிருந்தால்
சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளின் விடுதலைக்கு உத்தரவிட்டிருந்தால்
அவர் மாறிவிட்டார் அல்லது திருந்திவிட்டார் என நம்பியிருக்கலாம்.
மாறாக அவர் திருந்தவும் இல்லை. மாறவும் இல்லை என்பதையே அவரின் நடத்தைகள் காட்டுகின்றன.

No comments:

Post a Comment