Friday, February 28, 2020

• சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

• சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன! இவர் சிறந்த கல்விமான் என்கிறார்கள் இவர் சிறந்த மார்க்சியவாதி என்றும் கூறுகின்றனர். இவர் படித்த காலத்திலும் பகிடிவதை அல்லது இவர் கூறுகின்ற பாலியல்வதை இருந்தது. இவர் மாகாணசபையில் ஆட்சி செய்த காலத்திலும்கூட இந்த பகிடிவதை அல்லது இவர் கூறுகின்ற பாலியல்வதை இருந்தது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பொங்குகிறார்? சரி. பரவாயில்லை. அப்போது பொங்கவில்லை என்பதற்காக இப்போது பொங்கக்கூடாது என்று அர்த்தம் இல்லைத்தான். ஆனால் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு தாராளமாக பொங்கட்டும். பாலியல்வதைக்காக மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொங்கியவர், பாலியல் வல்லறவு மற்றும் கொலை செய்த இந்திய அமைதிப்படை தண்டிக்கப்பட வேண்டும் என்று பொங்குவாரா? அல்லது, முள்ளிவாய்க்காலில் தமிழ்பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்று பொங்குவாரா? குறிப்பு - இதுவரை எப்படி தன் சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகளை அகற்றி வளர்ந்து வருகின்றதோ அதேபோன்று இனியும் வளரும் வல்லமை தமிழ் இனத்திற்கு உண்டு. Image may contain: 4 people, including தோழர் அருண் சோரி, text

No comments:

Post a Comment