Wednesday, July 31, 2024

எனக்கு ஒரு கனவு

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. புத்தர் பெருமான் மீண்டும் பிறக்க வேண்டும். அதுவும் தமிழனாக ஈழத்தில் பிறக்க வேண்டும். அவர் தமிழன் என்பதற்காக கண்கள் பிடுங்கப்பட்டு அவர் சிலையின் கீழ் போடப்பட வேண்டும். அவர் தமிழன் என்பதற்காக ஆடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக வீதியில் ஓடவிடப்பட வேண்டும். இறுதியாக அவர் தமிழன் என்பதற்காக எரியும் தார்ப்பீப்பாவினுள் வீசி எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். அப்போது புத்தர் என்ன போதனை செய்வார் என்பதை அருகில் இருந்து கேட்க வேண்டும். “காயங்களோடு சிரிப்பது எளிதல்ல. அப்படி சிரிக்க தொடங்கிவிட்டால் எந்த காயமும் பெரிதல்ல” – புத்தர்

No comments:

Post a Comment