Saturday, August 31, 2024

கடந்தமுறை தமிழ்பேசும்

கடந்தமுறை தமிழ்பேசும் மக்களின் வாக்கு தேவையில்லை எனக்கூறி தனிச் சிங்கள வாக்கில் கோத்தா வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை யாரும் தனிச் சிங்கள வாக்கில் வெற்றி பெற முடியாது. அதுமட்டுமன்றி தனி சிங்கள வாக்கில் வெற்றி பெறுவது பயன் இல்லை என்றும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுகின்றனர். குறிப்பாக ஜேவிபி தலைவர் அனுரா அவர்கள் தெற்கு அரசியல்வாதிகள் இதுவரை இனவாத அரசியலையே மேற்கொண்டு வந்தனர் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறிவந்த சிங்கள தலைமைகள் இப்போது தமது இனவாத அரசியல் பற்றி பேசுகின்றனர். நல்ல மாற்றம். வரவேற்போம். குறிப்பு – வெற்றியை வேற்றி என எழுதப்பட்டுள்ளது. அனுராவின் பிரச்சாரப்பிரிவினர் இதை கவனத்தில் கொள்ளவும்.

No comments:

Post a Comment