Saturday, August 31, 2024

என் வீட்டில் திருடன்

என் வீட்டில் திருடன் வந்து திருடினான். நான் “திருடன்” “திருடன்” என்று கத்தினேன். உடனே பொலிசார் என்னை கைது செய்தார்கள். நான் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது ஒரு கவிஞரின் கவிதை வரிகள். ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உண்மையாகவே எம் நிலத்தில் நடக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2500 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்த அரசும் பதில் வழங்கவில்லை. நீதி வழங்கவில்லை. ஆனால் அவர்களின் அடையாள நிகழ்வில் பங்குபற்றியவர்களை கைது செய்து மிரட்டுகின்றனர். திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வில் பங்குபற்றிய ராஜீவ்காந்த் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்க முனைகிறது சிங்கள அரசு.

No comments:

Post a Comment