Saturday, August 31, 2024

இந்திய அரசிடம் அடிபணிவது

•இந்திய அரசிடம் அடிபணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி. இந்திய ராணுவத்தால், • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர் பலி • 800க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு • கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம் இத்தனையையும் தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்று கவிஞர் காசி அனந்தன் கூறுகின்றார். இதுவரை இந்திய அரசு இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதுவரை எந்தவித நட்டஈடும் வழங்கப்படவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்கிறார் காசி அனந்தன். இந்திய அரசு, 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்கவில்லை. சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை. தீர்வு எதுவும் பெற்று தரவில்லை. ஆனால் இனப்படுகொலை செய்யும் சிஙகள அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. அப்படியென்றால் தமிழ் மக்கள் ஏன் மறக்க வேண்டும்? ஆனாலும் ஒரு ஆறுதல். மகிந்த ராஜபக்சா செய்த இனப்படுகொலைகளையும் தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்று அவர் இன்னமும் கூறவில்லை.

No comments:

Post a Comment