Saturday, August 31, 2024

தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு

தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கப்படும் என திராவிட முதல்வர் வாக்குறுதி அளித்தார். தேர்தல் முடிந்த பின்பு இப்போது அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப அவர் முயல்கிறார். அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக திருப்பி அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இப்போது அந்த நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்ப முயல்வது கண்டனத்திற்குரியது. இது குறித்து முதல் கண்டனக்குரல் வழக்கம்போல் சீமான் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. ஈழத் தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கின்றனர் என கேட்பவர்களுக்கு பதில் இது. குறிப்பு - இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வுக்குரிய உதவிகளும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதுவே இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வாகும்.

No comments:

Post a Comment