Saturday, August 31, 2024

ஈக மன்றோ ஈகம்

ஈக மன்றோ ஈகம் ================ மானமும் உயிரும் வாழ்வும் கருதி வானமும் நிலமும் நீரும் கடந்து கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும் மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள் ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக் காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை தன்னையும் இழந்து தமரையும் இழந்த அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி - 'தானு'வென் பெயரினள் தன்னினம் அழித்த வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம் நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த ஈக மன்றோ ஈகம் ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1991)

No comments:

Post a Comment