Saturday, August 31, 2024

அன்றும் இன்றும் ஈழத் தமிழர்

அன்றும் இன்றும் ஈழத் தமிழர் மீதான உறுதியான ஆதரவை வழங்கி வருபவர் சுப்பக்கா என்று அழைக்கப்படும் சுப்புலட்சுமி ஜெகதீசன். பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கி வந்தவர் அவர். ஈழத் தமிழரை ஆதரித்தமையினால் பத்து மாதங்கள் தடா சிறையில் வாடியவர். இன்று அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்தாலும் தனது ஈழத் தமிழர் மீதான ஆதரவை கைவிடவில்லை. ஈழத் தமிழ் அகதி மாணவர்களின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். அவரின் உணர்வுகளுக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment