Saturday, August 31, 2024

மற்றவர்கள் போல் தானும்

மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பியிருந்தால் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது, தோழர் தமிழரசன் கொஞ்சம் தந்திரமாக கம்யுனிசம் பேசியிருந்தால் இன்று திமுக விடம் நாலு சீட்டும் 25 கோடி ரூபா பணமும் பெற்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்தார். அதனால் சதி செய்து கொல்லப்பட்டார். அவரைக் கொன்றால் தமிழ்த்தேசிய விடுதலையை தடுத்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. ஆனால் இன்று தோழர் தமிழரசனை மறுத்துவிட்டு யாரும் தமிழ்த்தேசியம் பேசவிட முடியாது. அந்தளவுக்கு தோழர் தமிழரசன் வளர்ந்து நிற்கிறார். செப் -1 தோழர் தமிழரசன் 37வது நினைவு தினம்

No comments:

Post a Comment