Saturday, August 31, 2024

ஒரு டவுட் ?

• ஒரு டவுட் ? பெண்ணின் முதல் மாதவிடாயை சாமாத்திய விழாவாக எமது சமூகம் கொண்டாடுகிறது. அதுவும் புலம்பெயர்ந்து போன கனடா நாட்டில் ஹெலிகொப்டர் பிடித்தெல்லாம் கொண்டாடுகிறது. பரவாயில்லை. இங்கு எனது டவுட் என்னவென்றால், பெண்ணின் முதல் மாதவிடாயை கொண்டாடும் எமது சமூகம் அடுத்தடுத்த மாதவிடாயை தீட்டாக ஏன் பார்க்கிறது? ஏன் அவ் வேளைகளில் பெண்ணை கோயிலினுள் செல்லவிடாமல் தடுக்கிறது? எமது பெண் கடவுள்களுக்கு மாதவிடாய் வருவதில்லையா? அவர்களுக்கும் தீட்டாக பார்க்கப்படுகிறதா? காலத்திற்கு எற்ப பழக்கவழக்கங்களை நாம் மாற்றினால் என்ன? குறிப்பு – யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. யாரிடமாவது பதில் இருந்தால் பகிருங்கள்.

No comments:

Post a Comment