Wednesday, November 30, 2022

நினைவழியா நாட்கள்

•நினைவழியா நாட்கள் “அவ்ரோ குலம்” என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரராஜசிங்கம் அவர்கள் இளமாறன் என்ற புனை பெயரில் எழுதிய நூல் “நினைவழியா நாட்கள்” இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2022 ஒக்டோபர் 08 அன்று பிற்பகல் 15.00 மணியளவில் சுவிஸ்சில் நடைபெற்றது. ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறிய விரும்புவோர் இந் நூலினை படிக்கலாம். இலக்கியம் என்பது போராட துணிந்தவனுக்கு உந்து சக்தியை வழங்குவதாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறியிருக்கிறார். அதன்படி போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் திரும்பி பார்த்தல் என்பது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும். 2009 வரை சுவலிஸ் பொறுப்பாளராக இருந்தவர். பல விடயங்களை எழுதியிருக்கலாம். எழுதியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ எழுதாமல் தவிர்த்துவிட்டார். இந் நூல் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு உந்து சக்தியை வழங்க தவறியிருப்பது துரதிருஸ்டவசமானதே.

No comments:

Post a Comment