Saturday, December 21, 2019

ரோட்டுக்கு வந்து போராடித்தான்

ரோட்டுக்கு வந்து போராடித்தான் தன் இருப்பபை தக்க வைத்தக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லைத்தான்
அதுவும் ஈழ அகதிகளின் குடியுரிமைக்காக குரல் கொடுப்பதால் அவருக்கு எந்த பயனும் இல்லை என்றாலும்கூட
அவர் தாத்தாவும் அப்பாவும் ஆட்சி செய்த காலத்தில் ஏன் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும் என்று தெரிந்தும்கூட
அவர் வீதிக்கு வந்து போராடி கைது செய்யப்பட்டதும் ஒரு அடையாள போராட்டத்தை நடத்திய திருப்தியோடு மௌனமாக இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் குடியுரிமை மசோதாவை திரும்பப் பெறும்வரை போராடுவேன் என்று அறிவித்pருப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
அவர் என்ன நோக்கத்திற்காக போராட்டம் நடத்தியிருந்தாலும் அவரது போராட்டம் தமிழகத்தில் பலர் தொடர்வதற்கு வழி வகுத்துள்ளது என்பதுமட்டும் உண்மை.

No comments:

Post a Comment