Saturday, December 21, 2019

பின்லாந்து தலைவரும் ஈழத் தமிழர்களின் தலைவரும்!

பின்லாந்து தலைவரும்
ஈழத் தமிழர்களின் தலைவரும்!
பின்லாந்து மக்கள் தங்கள் பிரதமராக 34 வயதுடைய பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
ஆனால் ஈழத் தமிழ் மக்களின் தலைவராக ஒரு ஐயா இருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியவில்லை.
ஒருவேளை உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதால் வயது மூத்த ஒருவரை தலைவராக வைத்திருக்கிறார்களோ என்னவோ?
பாவம் அவருக்கு தமிழ் மக்கள் சென்றால் கண் தெரிவதில்லை. போராளிகள் கதை சொன்னால் காது கேட்பதில்லை. ஆள் துணையின்றி நடந்து வரவும் முடியவில்லை. சொகுசு பங்களாவும் பொலிஸ் பாதுகாப்பு இன்றியும் இருக்க முடியவில்லை.
இந்த சினிமாப் படங்களில்கூட “இப் படத்தில் பிராணிகளை துன்புறுத்த வில்லை” என்று காட்டுகிறார்கள்.
அந்தளவுக்கு மிருகங்களில்கூட அக்கறை கொள்ளும் ஒரு சமூகத்தில் வயதான ஒரு ஐயாவை தலைவராக வைத்து துன்புறுத்துகிறார்களே?
இந்த மிருகவதைச் சட்டத்தின் மூலம் இக் கொடுமைக்கு ஒரு முடிவு காண முடியாதா?

No comments:

Post a Comment