Saturday, December 21, 2019

என்கவுன்டர் கொலைகள் தவறானவை

•என்கவுன்டர் கொலைகள் தவறானவை
அதை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது
மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது அதனைப் பயன்படுத்தி என்கவுன்டர் கொலைகளை பொலிஸ் செய்துள்ளது.
பொலிஸ் தன் கையில் தண்டனை வழங்கும் அதிகாரத்தை எடுப்பது தவறாகும். இது மோசமான விளைவுகளையே எதிர் காலத்தில் ஏற்படுத்தும்.
ஏனெனில்,
(1) இந்த என்கவுன்டர் கொலைகளில் ஏழை மக்களே பலியாவர். பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீது என்கவுன்டர் நடத்தப்படாது.
(2) முக்கியமாக இத் தண்டனைகள் மூலம் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. மரண தண்டனை வழங்கும் அரேபிய நாடுகளைவிட குறைவான தண்டனைகள் வழங்கும் ஜரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவாகவே இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
(3) ஏற்கனவே இந்த என்கவுன்டர் போலி மோதல்கள் மூலம் மாவோயிஸட் போராளிகள் மற்றும் தமிழ்தேசிய போராளிகள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் என்கவுன்டர் கொலைகளை மக்கள் ஆதரித்தால் இனி அதிக அளவில் போராளிகள் கொல்லப்படும் அபாயம் உருவாகும்.
எனவே மக்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து இந்த என்கவுன்டர் கொலைகளை கண்டிக்க வேண்டும்.

No comments:

Post a Comment