Sunday, July 23, 2017

•தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

•தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
கோவையில் உள்ள ஈழ அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.
கடந்த மாதம் கோவையில் சிபிஎம் அலுவலகம் மீதும் இதே இந்து முன்னணியினர் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, “தமிழகத்தில் கலவரம் வெடிக்கும். கலவர பூமியாக மாறும்” என்று பகிரங்கமாக பொன் ராதாகிருஸ்ணன் மிரட்டுகிறார்.
திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக கூறும் தமிழக முதல்வர் இவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
அஞ்சலி செலுத்துவதற்கு மெழுகுவர்த்தி வைத்திருந்த திருமுருகன் காந்தியை பயங்கர ஆயுதம வைத்திருந்ததாக கைது செய்த தமிழக காவல்துறை பெற்றோல் குண்டு வீசுபவர்களை ஏன் கைது செய்யவில்லை?
அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக திருமுருகன்காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசு கலவரம் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டும் ராதாகிருஸ்ணனை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை?
திருமுருகன் காந்திக்கு ஒரு நியாயம். இந்து முன்னணியினருக்கு இன்னொரு நியாயம். இதுதான் தமிழக அரசின் நியாயமா?

No comments:

Post a Comment