Sunday, July 30, 2017

•மன்னித்து விடுங்கள் கருணாரட்ணம் அடிகளாரே!

•மன்னித்து விடுங்கள் கருணாரட்ணம் அடிகளாரே!
நீங்கள் கிருத்தவ பாதிரியராக இருந்தும் தமிழ் இன உணர்வோடு தமிழ் இன விடுதலைக்காக போராடியது உண்மைதான்.
அதனால்தான் சிங்கள அரசின் ஆழ ஊடுருவும் படையணி உங்களை கண்ணி வெடி (கிளைமோர்) வைத்து கொன்று போட்டது.
நீங்கள் விரும்பியிருந்தால் வெளிநாடு சென்று பாதிரியாராக பாதுகாப்பாக இருந்திருக்கலாம்.
ஆனால் நீங்கள் மக்களோடு மக்களாக இருந்துகொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள்.
கிளிநொச்சியில் இருந்துகொண்டு சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துச் சொன்னீர்கள்.
சிங்கள இராணுவம் உங்களை கிருத்தவராக பார்க்கவில்லை. உங்களையும் தமிழனாகவே பார்த்தது. அதனால்தான் கொன்றது.
ஆனால் நாங்கள் இனி உங்களை தமிழனாக பார்க்க முடியாது. இனி நீங்கள் கிருத்தவர். நாங்கள் இந்துக்கள்.
எங்களுக்காக சாசிஆனந்தன் அய்யா இந்துத் தமிழீழம் கேட்கிறார். இதனால் தமிழ் இனம் பிளவு படப் போகிறதே என்ற கவலையெல்லாம் எமக்கு இல்லை
இதை அறிந்தால் உங்களுக்கும் கவலையாக இருக்கும்தான். ஆனால் என்ன செய்வது? எங்களை மன்னித்து விடுங்கள்.

No comments:

Post a Comment