Sunday, July 23, 2017

அம்பானியின் ரிலைன்ஸ் கம்பனி வாங்கிய கடன் 3 லட்சம் கோடி ரூபா

அம்பானியின் ரிலைன்ஸ் கம்பனி வாங்கிய கடன் 3 லட்சம் கோடி ரூபா
தமிழக மாணவர்களின் மொத்த கல்வி கடன் 16 ஆயிரம் கோடி ரூபா
ஆனால் தமிழக மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பு ரிலைன்ஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரிலைன்ஸ் நிறுவனத்தின் சித்திரவதை பொறுக்காமல் மதுரையில் ஒரு மாணவன் தற்கொலை செய்தான்.
இது குறித்து நியாயம் கேட்டவர்கள் தோழர்கள் தமிழரசன், திருச்செல்வம், கவிஅரசு, காளை, ஜோன் மார்டின், காhத்திக்.
இந்த ஆறுபேரும் 10.03.2014 யன்று கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கடந்த 1223 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதோடு இவர்களது ஜாமீன் விடுதலையும் மறுக்கப்படுகிறது.
மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை சிறையில் அடைத்து மக்கள் போராட்டங்களை நசுக்கிவிட அரசு முயல்கிறது.
இந்த அறுவரின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment