Sunday, July 23, 2017

•நேற்று திருமுருகன் காந்தி இன்று வளர்மதி நாளை ?????

•நேற்று திருமுருகன் காந்தி
இன்று வளர்மதி
நாளை ?????
நேற்று, கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக திருமுருகன்காந்தி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்
இன்று, கதிரமங்களம் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்கு வளர்மதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாளை, இதைப் படிக்கும் உங்களில் யாரேனும் ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம்.
இதுதான் இன்றைய தமிழக நிலைமை. எடப்பாடி அரசு பா.ஜ.க வின் எடுபிடி அரசாக செயற்படுகிறது.
மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து மிரட்டுகிறது.
குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அரசியல்வாதிகளும் கிரிமினல்களும் வெளியில் சுதந்திரமாக உலாவுகிறார்கள்.
ஆனால் மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறார்கள்.
ஜனநாயக விரோத எடப்பாடி அரசை தூக்கியெறிய தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும்.

No comments:

Post a Comment