Sunday, July 23, 2017

வரலாறு எப்போதும் வென்றவனையும் பதிவு செய்யும்.

வரலாறு எப்போதும்
வென்றவனையும் பதிவு செய்யும்.
தோற்றவனையும் பதிவு செய்யும்.
ஆனால் ஒருபோதும்
போட்டியிடாதவனை பதிவு செய்யாது.
தொடர்ந்து போராடிய கேப்பாப்பிலவு மக்கள் நாளை 180 ஏக்கர் காணிகளை பெறுகிறார்கள்
அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். மீதி 300 ஏக்கர் காணியையும்கூட அவர்கள் பெறுவார்கள்.
தமது காணி முழுவதையும் பெறும்வரை அவர்கள் போராடுவார்கள். ஏனெனில் போராட்டம் மட்டுமே அவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கிறது.
கேப்பாப்பிலவு மக்கள் தமது போராட்டத்தின் மூலம் மற்றவர்களுக்கும் வழி காட்டுகிறார்கள்.
ஓடாத மானும்
போராடாத இனமும்
வாழ்ந்துவிட முடியாது.

No comments:

Post a Comment