Sunday, July 23, 2017

கொழும்பில் அரச நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது!

கொழும்பில் அரச நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள்
இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது!
கொழும்பிலுள்ள பிரதான காணிகள் பலவற்றை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
கொழும்பு டீ.ஆர்.விஜேராம மாவத்தை 56, 70 மற்றும் 126 என்ற இலக்கங்களின் கீழ் சதோச நிறுவனத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை இந்தியாவின் ஜே ஹோட்டல் லிமிட்டட் சென்னை நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்திற்கு சொந்தமான அதே வீதியில் அமைந்துள்ள இலக்கம் 40, 105 மற்றும் 109 என்ற இலக்கங்களில் உள்ள காணியை க்ரூடின் க்ரூப் கல்கத்தா இந்தியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 165 என்ற இலக்கத்தின் கீழ் உள்ள சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தை இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இதேவேளை, பான்ஸ் பிரதேசத்தின் இலக்கம் 17 இன் கீழ் உள்ள காணியை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவற்றிற்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் ததாசன்ன பிரதேசத்தில் பாரிய அளவு காணியை இந்திய நிறுவனம் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது
.
கடந்த மகிந்த ஆட்சி மட்டுமல்ல தற்போதைய ரனில் - மைத்திரி ஆட்சியும்கூட இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போவதாகவே இருக்கின்றது.
ஜே.ஹோட்டல் லிமிட்டெட் சென்னை, இது திமுக பாலு மற்றும் கனிமொழி ஆகியோரின் பினாமி கம்பனி என கூறப்படுகிறது.
திமுக டி.ஆர்.பாலு வுக்கு சொந்தமான ரோலர் படகுகளே பெரும்பாலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றன.
இவர்கள் ஏன் அவசரம் அவசரமாக வந்து மகிந்தவின் கையைக் குலுக்கினார்கள் என்பது இப்போது புரிகிறதா?

No comments:

Post a Comment