Sunday, July 23, 2017

•பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள் சுவிஸ் குமார் பணம் அதையும் தாண்டி பாய்கிறதா?

•பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்
சுவிஸ் குமார் பணம் அதையும் தாண்டி பாய்கிறதா?
வித்யா கொலை வழக்கின் எதிரியான சுவிஸ் குமாரின் பணம் எதுவரை பாய்கிறது என்பதே தற்போது விடை காண முடியாத வினாவாக இருக்கிறது.
சுவிஸ் குமாரின் பணம் வி.ரி தமிழ்மாறனுக்கு பாய்ந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் தற்போது வெளிவரும் செய்திகள் சுவிஸ் குமார் பணம் வி.ரி தமிழ்மாறனையும் தாண்டி பாய்ந்துள்ளதோ என நினைக்க தோன்றுகிறது.
வித்யா கொலை வழக்கில் முக்கிய சாட்சியான பொலிஸ் அதிகாரி சிறீகஜன் நாட்டை விட்டு தப்பியோட முயன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரியான இவர் திருட்டு நகைகளை கொள்வனவு செய்யும் கடைகாரர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஏற்கனவே பணி மாற்றம் செய்யப்பட்டவர்.
தற்போது உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
இவர் கேட்டுக்கொண்டதாலேயே சுவிஸ்குமாரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாக வி.ரி தமிழ்மாறன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
வித்யா கொலை வழக்கில் முக்கிய சாட்சியான இந்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் சாட்சியமளிக்காமல் தப்பி செல்ல முயன்றது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே சாட்சி ஒருவர் நீதிமன்றத்திற்கு வராததால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு சாட்சி தான் வெளிநாடு போக வேண்டும் என்று நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
வேறொரு சாட்சி தனக்கு சுவிஸ் குமாரை தெரியாது என்று நீதிமன்றத்தில் பல்டி அடித்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது சுவிஸ் குமாரின் பணம் தமிழ்மாறனையும் தாண்டி பாய்ந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.
பாவம் வித்யா. ஏழையாக பிறந்ததால் கொல்லப்பட்டது மட்டுமன்றி நீதிகூட அவளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment