Wednesday, August 30, 2023

காணாமல் போதல் கொடுமை என்றால்

காணாமல் போதல் கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது. அந்த கொடுமையை 14 ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்? இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது? ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்தளவில் சிறுமி கில்மிஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை பல லட்சம் தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். கூடவே வாய்ப்பளித்த ஜீ டிவி சரிகமப குழுவினருக்கும் நன்றிகள். குறிப்பு- காணாமல் போனவர்கள் என கூறுகின்றனர். அது தவறு. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

No comments:

Post a Comment