Tuesday, August 15, 2023

கூமுட்டை குஞ்சு பொரிப்பதில்லை

•கூமுட்டை குஞ்சு பொரிப்பதில்லை பொதுவாக ஒரு பேப்பரில் வடையை வைத்து அழுத்தினால் எண்ணெய் காணாமல் போகும். ஆனால் வித்தியாதரன் எழுதிய பேப்பரில் வடையை வைத்து அழுத்தினால் வடையே காணாமல் போகும். ஆச்சரியம். ஆனால் உண்மை. அந்தளவுக்கு வித்தகர் இந்த வித்தியாதரன். தான் மகிந்தவுடன் உணவு அருந்தியது பிரபாகரனுக்கும் பிரபாகரனுடன் உணவருந்தியது மகிந்தவுக்கும் தெரியும் என்று கூறுகின்றார். அப்படியென்றால் கொழும்பில் கோத்தபாயாவின் வெள்ளைவான் கடத்தியது என்று ஆடியது எல்லாம் நாடகமா வித்தியாதரன் அவர்களே? தான் பத்திரிகையாளன் என்றும் தான் யாருடனும் கை குலுக்குவேன் என்கிறார். முன்னாள் போராளிகளை வைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சி தொடங்கியவரை, உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் பெயர் கொடுக்கப்பட்டவரை, இறப்பதற்குள் மாகாண முதல்வராகவோ அல்லது ஒரு எம்.பியாகவோ ஆகத் துடிப்பவரை, வெறும் பத்திரிகையாளர் என்பதா அல்லது அரசியல்வாதி என்பதா? ஒரு தமிழினப் படுகொலையாளியை குடும்ப நிகழ்வுக்கு அழைத்து கைகுலுக்குவதை தொழில் நிமித்தமானது என ஒருபோதும் குறிப்பிட முடியாது. குறிப்பு – என்ன இருந்தாலும் ஒரு மூத்த ஊடகவியலாளரை கூமுட்டை என்று குறிப்பிடலாமா என ஆதங்கப்படுபவர்களுக்கு என் விளக்கம் உதாரணங்கள் ஊனமானவை.

No comments:

Post a Comment