Wednesday, August 30, 2023

தொடரும் சிறை வாழ்வு

தொடரும் சிறை வாழ்வு எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்;டு ஆனால் இவர்கள் வாழ்வில் மட்டும் இன்னும் விடுதலை வரவில்லையே? மிருகத்தை வதை செய்தால் ஏன் என்று கேட்க புளுகிராஸ் உண்டு ஆனால் இவர்களின் வதை பற்றி கேட்க யாரும் இல்லையே? ஈழத்தமிழர் என்றால் இந்தியாவில் மிருகத்தைவிட கேவலமானவர்களா? சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்தால் பதில் சொல்ல ஒரு அதிகாரி இல்லை ஆனால் சிறப்புமுகாம் பற்றி நான் பதிவு போட்டால் லண்டனில் இருக்கும் தோழர் பாலனுக்கு தகவல் அனுப்புவது யார் என்று விசாரிக்க பல கியூ பிராஞ் அதிகாரிகள் உண்டு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

No comments:

Post a Comment