Tuesday, August 15, 2023

இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு

இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறதா? இல்லையே! இராணுவ தளபதிகளை அழைத்தால்தான் பாடசாலைக்கு நிதி உதவி செய்வோம் என்று அரசு சொல்கிறதா? இல்லையே! பாடசாலைகள் மீது குண்டு போட்டவர்களை, பாடசாலை மாணவர்களை கொன்று புதைத்தவர்களை, பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களை, பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்கலாமா? இந்த இனப்படுகொலையாளிகளை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் குரல் எழுப்பும் வேளையில், இந்த இனப்படுகொலையாளிகளுக்கு கனடா அரசு பயணத் தடை விதித்திருக்கும்வேளையில். யாழ் நகரில் புகழ் பெற்ற பாடசாலையே இனப்படுகொலையாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது முறையோ? முழந்தாளிட்டு இப்படி வாழ்வதைவிட எழுந்து நின்று மடிவது மேல்!

No comments:

Post a Comment