Tuesday, August 15, 2023

கடவுள் இல்லை என்று உலகில் கூறிய

கடவுள் இல்லை என்று உலகில் கூறிய முதல் பகுத்தறிவுவாதி புத்தர். இன்றும்கூட கடவுள் இல்லை என்றுகூற பலர் அச்சப்படுகின்றனர். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று கூறியவர் புத்தர் கடவுள் இல்லை என்று கூறியவரையே கடவுளாக்கி அதற்கு பௌத்த மதத்தையும் உருவாக்கிவிட்டார்கள். 1989ல் இதனைக்கூறி புத்தர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்தியவர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன். 1994ம் ஆண்டு மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை அம்பேத்கார் எழுதிய “புத்தர் தம் வரலாறு” தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது. இதையறிந்த நான் உடனே என் வழக்கறிஞர் கணேசன் மூலம் அந் நூலை வாங்கி படித்தேன். நான் புத்தர் பற்றிய நூலைப் படிக்க காட்டிய ஆர்வத்தைப் பார்த்து சிறை ஜெயிலர் செல்வராஜ் ஆச்சரியமடைந்தார். ஆனால் இப்போது புத்தரை வைத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்யும் தமிழின அழிப்பை பார்க்கும்போது என்னையும் அறியாமல் அந்த புத்தர் மீதே எரிச்சல் வருகிறது.

No comments:

Post a Comment