Tuesday, August 15, 2023

அவரை இறப்பதற்கு முன் ஒரு தடவையாவது

அவரை இறப்பதற்கு முன் ஒரு தடவையாவது நேரில் பார்க்க விரும்பினேன். முடியவில்லை. இது எனக்கு வருத்தமே. எனினும் அவர் மகன் குறித்து நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை அவர் கையில் சேர்ப்பித்தமை ஆறுதல் தருகிறது. தன் மகன் தோழர் தமிழரசனுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்ற அவரது ஆசை குறித்து அறிந்தவுடன் இது பற்றி தோழர் பொழிலனிடம் பேசினேன். அவரும் தாம் இதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகவும் சில சட்டச்சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டார். நான் அறிந்தவரையில் பொது இடத்தில் சிலை வைப்பதாக இருந்தால் மட்டுமே காவல்துறை தடுக்க முடியும். மாறாக யாராவது தமது சொந்த நிலத்தில் சிலை வைத்தால் அதனை தடுக்க முடியாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே தோழர் தமிழரசன் மீது மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் அவரின் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் செப் -1 திகதி தோழர் தமிழரசனின் 36 வது நினைவு தினம் அகும். இத் தினத்தில் இதுகுறித்து ஒரு நல்ல முடிவை அனைவரும் எட்டுவார்கள் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment