Tuesday, August 15, 2023

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை “ சோனகர்” என்ற தனி இனமாக இலங்கை அரசு கருதுகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமியர் தம்மை தமிழராகவே உணர்கின்றனர். அடையாளப்படுத்துகின்றனர். அதனால்தான் அப்துல் ரவூப் என்ற இஸ்லாமிய இளைஞன் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தான். ஆனால் இன்று அம் மக்கள் மத்தியில் இன உணர்வை விட மத உணர்வு அதிமாக ஊட்டப்படுகின்றது. இதன் விளைவே இதுவரை புலிகளை ஆதரித்து வந்த அமீரே “நாம் தமிழர் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களிடம் உங்கள் தலைவர் பிரபாகரனா இல்லை அல்லாவா என்று கேளுங்க” என்று பேச வைத்திருக்கிறது. எல்லோரும் அமீரா இப்படி பேசியது என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஆனால் எனது கவலையெல்லாம் தமிழ்நாட்டில் இரகசியமாக வளர்ந்துவரும் இஸ்லாமிய மத வெறிக் கும்பல் பற்றியே. இந்த கும்பல்தான் இலங்கையில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு காரணம். இக் கும்பல்தான் அக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளை வழங்கியது. அவ் ஈஸ்டர் வெடி குண்டு தாக்குதல்களில் அதிகம் இறந்தது கிருத்தவ தமிழ் மக்களே. ஆனாலும் இந்து மற்றும் கிருத்தவ தமிழ் மக்கள் இஸ்லாமிய மக்களை திருப்பி தாக்கவில்லை அதுமட்டுமல்ல சிங்களவர்கள் இஸ்லாமிய மக்களை தாக்க முற்பட்டபோதும் அதனை தடுத்து இஸ்லாமிய மக்களை அப்போது பாதுகாத்தவர்கள் தமிழ் மக்களே. அதேபோல் தமிழக மக்களும் ஒன்று திரண்டு இந்த இஸ்லாமிய மத பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும். நான் அறிந்தவரையில் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மத பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தவர் இமாம் அலி. பாபர் மசூதி இடிக்கப்பட்டால் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலை இடிப்பேன் என இவர் கூறினார். அதனால் இவரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்கள். இவர் எனது செல்லுக்கு அருகில் வைக்கப்பட்டதால் எப்போதும் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார். இவர் மதுரை சிறையில் இருந்து தப்பிச் சென்று பல குண்டு தாக்குதல்களை நடத்தியபோது அதற்கு நான்தான் உதவி செய்திருக்ககூடும் என கியூ பிரிவு பொலிஸ் சந்தேகம் கொண்டது. அப்போது திருச்சி கியூ பிரிவு டி எஸ் பியாக இருந்த சண்முகம் “ தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் நீதான் காரணம். உன்னை ஒருபோதும் விட மாட்டோம்” என நேரிடையாகவே என்னை மிரட்டினார்.

No comments:

Post a Comment