Friday, March 22, 2024

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார். உயிரற்ற உடலாகவாவது சென்று சேர்ந்துவிட்டார் என ஆறுதல் கொள்வதா? அல்லது உயிருடன் அனுப்பிவைக்காதது குறித்து இந்திய அரசு மீது கோபம் கொள்வதா? தூக்கு தண்டனையே அதி உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. ஆனால் சாந்தன் அதைவிட கொடிய தண்டனையை அனுபவித்துள்ளார். இதனை அவர் தமிழ் மக்களுக்காகவே அனுபவித்தார். எனவேதான் தமிழ் மக்களும் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர். இனி ஒவ்வொரு வருடமும் இந் நாளில் சாந்தனை மட்டுமன்றி சாந்தன் மரணத்திற்கு காரணமானவர்களையும் சேர்த்தே வரலாறு நினைவு படுத்தப் போகிறது.

No comments:

Post a Comment