Friday, March 22, 2024

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான ஏழு தமிழரில் ஒருவரான ரவிச்சந்திரன் அவர்களின் காரா புத்தக நிலைய திறப்புவிழா நடைபெற்றுள்ளது. ரவிச்சந்திரன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களால் தமிழ்நாட்டில் எந்தவித சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படவில்லை. ஆனால் முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோரை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. இத்தனைக்கும் முருகனின் மனைவி நளினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். மனைவியுடன் சேர்ந்துவாழ கணவனை அனுமதிக்க வேண்டும் என்பது உலக மரபு. ஆனால் அதையும்கூட ஏற்றுக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். அதுவும் ஈழத் தமிழர்கள்.

No comments:

Post a Comment