Friday, March 22, 2024

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வரம் என்பார்கள். அது எனக்கு நிறைய கிடைத்து வருவது மகிழ்ச்சியே. சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன்பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை. ஒருமுறை நான் வேலுர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது (1992ம் ஆண்டு) அங்கு இருந்த காயம்பட்ட புலிப் போராளிகளால் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கரப்பந்தாட்டப்போட்டி நடத்தி கொண்டாடினார்கள். இறுதியாக இரண்டு கண்ணும் இரண்டு கையும் அற்ற ஒரு போராளி எனக்கு புட்டும் பலாப்பழமும் பிறந்தநாள் பரிசாக தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இந்த வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.அவை தொடர்ந்து பயணிக்க துணைபுரிகின்றன.

No comments:

Post a Comment