Friday, March 22, 2024

நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்

•நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள் நடிகை பெத்து ராஜ்க்காக குரல் கொடுப்பார்களா? நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான உறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நடிகை பெத்து ராஜ்க்கு மதுரையில் மால் ஒன்றை உதயநிதி வாங்கிக்கொடுத்ததாக முன்னர் ஒரு செய்தி வந்தது. இப்போது நடிகை பெத்துராஜ்க்கு துபாயில் ஒரு வீட்டை அமைச்சர் உதயநிதி வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. நடிகை திரிஷா பற்றி செய்தி வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த சேரன் போன்றவர்கள், இப்போது நடிகை பெத்து ராஜ் பற்றிய செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர்? உதயநிதி அமைச்சராக இருக்கிறார். காவல்துறை அவர்களின் கையில் இருக்கிறது. ஏன் இச் செய்தியை கூறிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சவுக்கு சங்கர் கூறியது உண்மை என்றால் உதயநிதிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? கலைஞர் 36 படத்திற்கு கதைவசனம் எழுதி 45000கோடி ரூபா சம்பாதித்தார் என்று கூறுவதுபோல் உதயநிதி நாலு படத்தில் நடித்து இத்தனை கோடி சம்பாதித்தார் என்று கூறப்போகிறார்களா?

No comments:

Post a Comment