Friday, March 22, 2024

நினைவஞ்சலிகள்!

•நினைவஞ்சலிகள்! தனித் தமிழர் சேனைத் தலைவர் நகைமுகன் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும்.(14.03.2016) நகைமுகன் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர் மட்டுமன்றி உறுதியான ஈழத்தமிழர் ஆதரவாளரும்கூட. விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர். சிவசேனைத் தலைவர் பால்தக்ரே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க இவரே காரணம் என்றும் கூறப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி மரணத்தின் பின் ஈழத் தமிழரை ஆதரிக்க பலரும் அஞ்சிய சூழலில் இவர் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தார். “பாயும்புலி பண்டார வன்னியன்” என்னும் இதழ் நடத்தி வந்தார். அதில் தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து எழுதினார். குறிப்பாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த என் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்

No comments:

Post a Comment