Friday, March 22, 2024

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் ஒருவர் ஈழத் தமிழர் சாந்தன் இன்னொருவர் தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் கடந்த 28.02.2024யன்று மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தமிழக அரசு அறிவித்தது. சாந்தன் மரணமான அதே 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இங்கு கவனிக்க வேண்டியது 2009, 2024ல் தமிழக அரசாக இருந்தது திமுக. ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு நாளை 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.

No comments:

Post a Comment