Sunday, March 29, 2020

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள்

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள் அவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவனால் நடக்க இருக்கும் ஆபத்தை புரிந்து கொள்ள முடியவில்லை ஏனெனில் அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். அவர்கள் அவன் மீது பெற்றோலை ஊற்றினார்கள் அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று கத்தியவாறு அவன்மீது நெருப்பு வைத்தார்கள். அவர்களுக்கு அவன் பெயர் முக்தாஸ் என்பது அவனைக் கொல்வதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கு தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் சிரித்தக் கொண்டே கருகிப் போனான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாரத மாதா சிரித்திருக்கமாட்டாள். நிச்சயம் தலை குனிந்து கண்ணீர் சிந்தியிருப்பாள். குறிப்பு - அமைதிப்படை என்று வந்தவர்கள் 1989ல் நெல்லியடியில் மெண்டல் பத்மநாதன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவனை சுட்டுக் கொன்றார்கள். அவனும் இறக்கும்போது தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பது தெரியாமல் சிரித்துக் கொண்டே இறந்திருப்பானா? Image may contain: 1 person, smiling, close-up

No comments:

Post a Comment