Sunday, March 29, 2020

நாம் ஊமைகளாக இருக்கும்வரை

•நாம் ஊமைகளாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! தான் பதவிக்கு வந்தால் அடுத்த நிமிடமே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கோத்தா உறுதியளித்திருந்தார். அதுமட்டுமல்ல தான் தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாக செயற்படுவேன் என பதவியேற்பின்போது உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்தபடி ஜனாதிபதி கோத்தா செயற்படவில்லை. மாறாக சிங்கள பௌத்த இனவெறி அரசாகவே அவர் செயற்படுகின்றார். எட்டு தமிழர்களை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வுPரரை இன்று அவர் விடுதலை செய்துள்ளார். இந்த சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட எட்டு தமிழர்களுக்குள் ஒரு ஜந்த வயதுச் சிறுவனும் அடங்கும். ஜனாதிபதி கோத்தாவின் இந்த சிங்கள இனவெறிச் செயற்பாட்டை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்வோம். இலங்கையில் தமிழருக்கு நீதி மறுக்கப்படுகின்றது என்பதை நாம் உலகிற்கு உரத்துக் கூறுவோம். கோத்தா போன்ற கொடி விஷப் பாம்புகளுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும் என்றால் நாம் கழுகாக மாற வேண்டும். Image may contain: 2 people

No comments:

Post a Comment