Sunday, March 29, 2020

நடிகர் அக்ஷய்குமார் கொரோனா நிதியாக 25 கோடி ரூபா

நடிகர் அக்ஷய்குமார் கொரோனா நிதியாக 25 கோடி ரூபா வழங்கியுள்ளார். தெலுங்கு நடிகர்கள்கூட பல கோடி ரூபாய்களை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மராட்டிய நடிகர் ரஜனி எத்தனை கோடி ரூபா வழங்கினார் என்பதை யாராவது அறியத் தருவீர்களா? அவர் பணம் வழங்க தேவையில்லை. பள்ளி வாடகையை செலுத்தினாலே போதும் என இதைப் படிப்பவர்கள் மனதில் நினைக்கக்கூடும். என்ன செய்வது? அவர் தமிழர்களை ஆள நினைப்பதால் தமிழருக்கு எவ்வளவு கொடுத்தார் என்பதை அறிய தூண்டுகிறது. ஆனால் 27 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் 5000ரூபா பணத்தை வழங்கியுள்ளார். இவர் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20000 ரூபா பணத்தை வழங்கியுள்ளார். சிறையில் உழைத்து வரும் பணத்தில் இருந்து இந்த உதவிகளை அவர் தமிழ் மக்களுக்கு செய்கிறார். ஆனால் அவரை “பயங்கரவாதி” என்று கூறி 27 வருடமாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறது அரசு. குறைந்தபட்சம் நீண்டகால பரோலிலாவது தமிழக அரசு இவரை விடுதலை செய்ய முன்வர வேண்டும். Image may contain: 1 person, selfie and close-up Image may contain: 1 person

No comments:

Post a Comment