Sunday, March 29, 2020

•சீ வெட்கம்!

•சீ வெட்கம்! தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கானவர்களை மாவீரர்களாக அர்ப்பணித்த இனம், இன்று தன் இனத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று போராடுகிறது. ஒரு மனிதன் நோயுற்றால் அவன் யாராக இருந்தாலும் அவனுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்பது மனிதாபிமானம். ஆனால் நோயாளி ஒரு தமிழன் என்றும் தெரிந்தும்கூட அவனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்றால் அதன் அர்த்தம் என்ன? இந்தளவு குறுகிய குரூர மனநிலைக்கு என் தமிழ் இனம் சென்றுவிட்டதா? இது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தலைவர்கள்கூட தேர்தல் நலனை கருத்தில் கொண்டு தூண்டி விடுகிறார்கள். என்னே கொடுமை இது? Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment