Sunday, March 29, 2020

இந்நிலையிலாவது ஜனாதிபதி இரங்குவாரா?

•இந்நிலையிலாவது ஜனாதிபதி இரங்குவாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வாரா? அநுராதபுர சிறையில் மூன்று கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால் கலகம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை எனில் அவர்களை அடைத்து வைத்திருக்க அரசுக்கு உரிமை இல்லை. ஈரானில் இவ்வாறு பல்லாயிரம் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அநுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் நிலை என்னவென்று தெரியவில்லை. தான் பதவிக்கு வந்தால் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி கோத்தா உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் உறுதி அளித்தபடி இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையிலாவது ஜனாதிபதி கோத்தா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வர வேண்டும். Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment