Sunday, March 29, 2020

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம்.

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம். சுமந்திரன் அவர்களே! சரி. நம்புகிறோம். ஆனால் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் கூறினால் நம்புவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் உங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து. சம்பந்தர் ஐயாவின் கடவுள் காளி அம்மன். இதில் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் தெளிவாக கூறிவிடுங்கள். இல்லாவிடின் அப்புறம் மதக் கலவரம் வந்துவிடும். அவருக்கு காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. பிறர் உதவி இன்றி நடக்ககூட முடியவில்லை. இந் நிலையில் அவராகவே ஒதுங்க முன்வரும்போது எதற்காக தடுக்கிறீர்கள்? இளையவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நீங்கள்தானே பேசியிருக்கிறீர்கள். அப்புறம் சம்பந்தர் ஐயா ஒதுங்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? சம்பந்தர் ஐயா போய்விட்டால் அப்புறம் உங்கள் ஆட்டம் எடுபடாது என்று அச்சப்படுகிறீர்களா? Image may contain: 2 people, possible text that says 'NEWSUTHANTHIRAN.COM கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்தகொடை சம்பந்தன்! சுமந்திரன் பெருமிதம்'

No comments:

Post a Comment