Sunday, March 29, 2020

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி

•பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி தன் வீட்டு மொட்டைமாடியில் ஏறிநின்று கைதட்டும் இந்தியர்! பல நாடுகள் மக்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளன. அதுமட்டுமல்ல மக்களுக்கு உதவுவதற்காக பல பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளன. ஆனால் இந்திய பிரதமர் மக்களை மொட்டை மாடியில் ஏறி நின்று கை தட்டும்படி கேட்டுள்ளார். பாவம் அன்றாடம் காய்ச்சிகள் என்ன செய்ய முடியும்? வேலை இல்லை. வருமானம் இல்லை. இவர்கள் உணவிற்கு என்ன செய்ய முடியும்? மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அரசு கடவள்களைப் பற்றி கவலை கொள்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் பூரி ஜகன்நாதன் கோயில் சாமி சிலைகளுக்கு கொரோணா தொற்று எற்பட்டுள்ளதா என பரிசோதிக்கும்படி டாக்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். டாக்டர்களும் மறுப்பு கூறாமல் முதல்வர் உத்தரவுப்படி சென்று பரிசோதித்துள்ளனர். கொரோணா வைரஸ் பரிசோதிப்பதற்கு ரத்தம் எடுக்க வேண்டும். இவர்கள் எப்படி சாமி சிலையில் இருந்து ரத்தம் எடுத்திருப்பார்கள்? இதுகூடப் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு இலங்கை ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். கொரோணா பாதிக்கப்பட்டவர்களை தங்களுடன் கொண்டுவந்து அடைக்க வேண்டாம் என்று கூறிய சிறைக்கைதிகள் மூவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளார். என்ன கொடுமை இது? Image may contain: 4 people, outdoor

No comments:

Post a Comment