Sunday, January 18, 2015

சர்வாதிகார மகிந்த அரசை விரட்டுவோம்!

 சர்வாதிகார மகிந்த அரசை விரட்டுவோம்!
மகிந்த தொடர்ந்து ஆள்வதற்கு இது ஒன்றும் மன்னர் ஆட்சி அல்ல.
தனது மகன் நாமலை பதவியேற்ற இது ஒன்றும் பரம்பரை ஆட்சியும் அல்ல.
ஒரு குடும்பம் மொத்த நாட்டையும் கொள்ளையிடுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
தொடரும் சர்வாதிகார கிட்லர் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும்.
மகிந்த கும்பலின் தேர்தல் தோல்வி உறுதியாகிவிட்டது.
மாற்றத்தை விரும்பும் மக்களின் முடிவிற்கு மாறாக
தில்லுமுல்லு செய்து பதவியில் தொடர முற்பட்டால்
லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே கிடைக்கும்
மக்களின் பணத்தை கொள்ளையடித்த கும்பல் தப்பி ஓட முயல்கிறது.
அவர்கள் அனைவரும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
அவர்களிடமிருந்து மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
ஜெர்மனியில் பாசிட் சர்வாதிகாரி கிட்லர் போல
பிலிப்பைன்சில் சர்வாதிகாரி மாக்கோஸ் போல
ஈரானில் சர்வாதிகாரி மன்னர் ஷா போல
இலங்கையின் சர்வாதிகாரி மகிந்த வீழ்த்தப்பட வேண்டும்.
யார் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதல்ல
யார் அடுத்த ஜனபதியாக வரக்கூடாது என்பதே
மக்கள் முன் உள்ள தெரிவாக இருத்தல் வேண்டும்.
ஒரு பிசாசுவே தன்னை பிசாசு என்று திமிராக ஒத்துக்கொண்ட பின்பும்
அந்த பிசாசு மகிந்தவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

No comments:

Post a Comment