Sunday, January 18, 2015

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

• அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
2014 முடிந்து 2015 ஆரம்பித்துள்ளது.
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.
2014 ல் இந்தியாவில் காங்கிரஸ் அராஜக அரசு வீழ்த்தப்பட்டது.
2015ல் இலங்கையில் மகிந்த சர்வாதிகார அரசு வீழ்த்தப்படும்.
இலங்கையில்
போர் முடிந்து 5 வருடமாகிவிட்டது. ஆனால் சிறையில் உள்ளவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்ல இந்த தேர்தல் நேரத்தில்கூட ஒரு வேட்பாளரும் சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து பேசவில்லை.
தமிழ்த் தேசிய கூட்மைப்புகூட சிறையில் உள்ளவர்களின் விடுதலையை கோராது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இந்தியாவில்
கூலிப்படையை வைத்து கொலை செய்த சங்கராச்சாரியார் விடுதலை.
என்கவுண்டர் வழக்கில் இருந்து பி.ஜே.பி தலைவர் அமிர்த்சா விடுதலை.
தண்டனை விதிக்கப்பட்ட ஜெயா அம்மையார் கூட ஜாமீனில் விடுதலை.
ஆனால் அப்பாவி பேரறிவாளன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.
2015ம் ஆண்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும் ஆண்டாக தீர்மானிப்போம்.
அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment